கவியரசு கண்ணதாசன் அவர்களின் 97-வது பிறந்த நாள் அரசு விழா; கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 June 2023

கவியரசு கண்ணதாசன் அவர்களின் 97-வது பிறந்த நாள் அரசு விழா; கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்பு.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், கவியரசு கண்ணதாசன் அவர்களின் 97-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், கவியரசு கண்ணதாசன், மார்பளவுச்சிலைக்கு, அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், கவியரசு கண்ணதாசன், கலை மற்றும் சினிமாத்துறையில் மிகுந்த பற்றுதல் கொண்டு சிறப்பாக செயல்பட்டதனால் அனைவராலும் போற்றப்பட்டவர் ஆவார். மேலும், அரசியலில் கால் பதித்து, பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டவர். அவர்களின் புகழை பறைசாற்றுகின்ற வகையில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர், அன்னாரது பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடும் நோக்கில், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.


அதனடிப்படையில், இந்தாண்டு கவியரசு கண்ணதாசன் அவர்களின் 97-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும், கவியரசு கண்ணதாசனை, கௌரவப்படுத்திடும் வகையில், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் , கவியரசு கண்ணதாசன் பிறந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியில் தமிழக அரசின் சார்பில் அன்னாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு மார்பளவுச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது.


மேலும், இளைஞர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் ஏதுவாக, இம்மணி மண்டபத்தில் நூலகம் அமைக்கப்பட்டு, இது தவிர திறமை வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு, இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக பயிற்சி வகுப்புக்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இம்மண்டபத்தில் நடத்தப்படுவது கவியரசருக்கு மேலும், பெருமை சேர்க்கிறது என , கூட்டுறவுத்துறை கேஆர்.பெரியகருப்பன், தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாங்குடி (காரைக்குடி),  ஆ.தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், கவியரசு கண்ணதாசன் அவர்களின் புதல்வி விசாலாட்சி கண்ணதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், வட்டாட்சியர் ப.தங்கமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad