அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்! அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்! என்பதை நிரூபிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மானாமதுரையை சேர்ந்த மாணவி செல்வி. ஜனனி நேற்று மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார்.

மேலும் நிகழ்வில் மாவட்ட அளவில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 100 மதிப்பெண் பெற்ற அபர்ணா, மகாலட்சுமி, ரேகாஸ்ரீ என்ற மாணவிகளும் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் அவர்களும், ஆசிரியப் பெருமக்களும் உடனிருந்தனர்.
சிவகங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்த இப்பள்ளி மாணவிகள் வாழ்த்துக்களை பெற்றதோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும் உயர்கல்வி பயில அரசு சார்பாக உதவிகளை பெற்று தருவதாக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உறுதியளித்தார்.
- செய்தியாளர் ஜேகெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment