சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவியேற்பு செய்து வைத்து, நியமனத்திற்கான ஆணையினை வழங்கினார் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 May 2023

சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவியேற்பு செய்து வைத்து, நியமனத்திற்கான ஆணையினை வழங்கினார் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்.


கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவியேற்பு செய்து வைத்து,  நியமனத்திற்கான ஆணையினை வழங்கினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில், (29.05.2023), இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு  பதவியேற்பு செய்து வைத்து, நியமனத்திற்கான ஆணையினை, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜீத், தலைமையில், வழங்கி தெரிவிக்கையில், முத்தழிழறிஞர் டாக்டர்.கலைஞர், வழியில் தமிழகத்தில் நல்லாட்சியினை வழங்கி கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்துத்துறைகளின் சார்பில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். 


அதில், தமிழகத்தில் அனைத்து  மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து கோவில்களிலும் தேவையான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கென, அனைத்து மாவட்டத்திலும் அறங்காவலர் குழு ஒன்றை அமைத்து, அதன் வாயிலாக, சிறப்பான பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசால் நடவடிக்கைகள்; மேற்கொள்ளப்பட்டுள்ளது அதனடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பாளர்கள் பதிவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. 


அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலும் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்புமிக்கவர்களான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா, இன்றையதினம் சிறப்பாக நடைபெறுகிறது. முத்தழிழறிஞர் டாக்டர்.கலைஞர், ஆட்சியின் போது, அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்று அவர்களின் அறிவுரைக்கிணங்க, திருக்கோவில் ஸ்தலங்களுக்கான பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை அச்சமயம் நான் மேற்கொண்டுள்ளேன். தாங்கள் வகிக்கும் பொறுப்புகளில் தனிகவனம் செலுத்தி, தங்களது துறைகளை மேம்படுத்துவதற்கான பொறுப்பு, ஒவ்வொருவரிடத்திலும்; இருத்தல் வேண்டும். இறைவனுக்கு தொண்டு செய்யும் மகத்தான பணியினை, இன்றையதினம் பொறுப்பேற்றுள்ள நீங்கள் பெற்றுள்ளீர்கள். 


இதனை கருத்தில் கொண்டு, துறைரீதியாக உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு, ஒருமிக்க கருத்தோடு, புதிய திட்டச் செயல்முறைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்துத்தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படும் அரசாக,  தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. அதற்கு உறுதுணையாக இருந்து,  தமிழ்நாடு முதலமைச்சர், கரங்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அறங்காவலர் குழுவைச் சார்ந்தவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.


மேலும், சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுவில் புதிதாக தலைவர் பதவியேற்றுள்ள  இ.புவனேஸ்வரி, உறுப்பினர்களாக பதவியேற்றுள்ள ஏ.ஆர்.ஜெயமூர்த்தி, கரு.க.வெள்ளையன்,  கா.கௌரி மற்றும்  சோ.செல்வராஜ் ஆகியோர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும், தங்களின் பணி சிறப்பதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என,  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) நா.பழனிக்குமார், உதவி ஆணையர் வே.செல்வராஜ்,முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad