மே தினத்தன்று (01.05.2023) தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நடவடிக்கை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 May 2023

மே தினத்தன்று (01.05.2023) தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நடவடிக்கை.


சென்னை, முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆணையர் டாக்டர்.அதுல்ஆனந்த் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, உத்தரவின்படியும்; சிவகங்கை, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சு.ராஜ்குமார், தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான (01.05.2023) மே தினத்தன்று, சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958ன்படி தேசியவிடுமுறை தினமாகிய மே தினத்தன்று 01.05.2023 அன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.  மேற்படி, தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும். 


மேற்படி, தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு, என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு, என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு என்ற படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 


அவ்வாறு, தேசிய விடுமுறை தினமான (01.05.2023) மே தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின் போது, மேற்படி சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களின் மீது சிவகங்கை மாவட்டத்தில் 55 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961 ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad