'உடன்பிறப்புகளாய் இனைவோம்', சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 April 2023

'உடன்பிறப்புகளாய் இனைவோம்', சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.


திராவிட பேரியக்கத்தின் வெற்றி முயற்சியாம் "உடன்பிறப்புகளாய் இணைவோம்" சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா குமரகுறிச்சி கிராமத்தில் கழக உறுப்பினர் சேர்க்கை முகாமினை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் தொடக்கி வைத்தார் நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சுப.மதியரசன் அவர்களும், விவசாய அணி திரு.காளிமுத்து அவர்களும், திரு தட்சிணாமூர்த்தி அவர்களும், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் திரு சுப.தமிழரசன் அவர்களும், எண்ணற்ற கழக இளைஞரணி உடன்பிறப்புகளும், கழக மூத்த நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே மாண்புமிகு தமிழக முதல்வர் கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் "உடன்பிறப்புகளாய் இனைவோம்" என்ற லட்சியம் பயணம் தொடர்ந்து வேகமெடுத்து வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் செயல் தொண்டர்களிடமும் பொது மக்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், பாசிச சக்திகளை வேரருக்கும் முக்கிய யுக்தி ஆகமென தெரிவிக்கின்றனர் தொகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும்.


- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad