சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 71ஆவது பட்டமளிப்பு விழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 25 April 2023

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 71ஆவது பட்டமளிப்பு விழா.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 71ஆவது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. 2017- 2020ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை  கலை அறிவியல் பாடங்களில் பயின்று பட்டம் பெற தகுதியுடையோருக்கு பட்டம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
 

விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்து பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தார்.  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் க. ரவி பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். வள்ளல் அழகப்பர் தனது 38 வது வயதில் கல்வி நிறுவனங்களை துவக்கி 10 ஆண்டுகளுக்குள் கலைக்கல்லூரி, மாதிரி பள்ளி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், கல்வியல் கல்லூரி, உடற்கல்வி கல்லூரி என பல்வேறு நிறுவனங்களை துவக்கினார். 


இக்கல்வி நிறுவனங்களை மட்டும் வள்ளல் அழகப்பர் தொடங்கி இருக்காவிட்டால் காரைக்குடி ஒரு கிராமமாக இருந்திருக்கும் என்றும் மேலும் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கைப்படி தற்போது இந்திய அளவில் 54வது இடத்தில் இருக்கும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி இன்னும் பல சாதனைகளை எட்டும் என தான் நம்புவதாகவும் கல்வி என்பது நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஒரு கருவி என்றும் கல்வி என்பது மன ரீதியாக வலிமையானவராக மாணவரை மாற்றும் என்றும் வள்ளுவரின் வாக்குப்படி அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வி செல்வமே ஆகும் என்றும் கூறி இந்த பட்டம் என்பது மாணவர்கள் இதுவரை  சந்தித்த கஷ்டங்களின் முடிவு அல்ல என்றும் இது அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய தொடக்கம் என்றும் குறிப்பிட்டார். 


மேலும் பெற்றோரின் மிகப்பெரிய தியாகத்தால் பட்டத்தை பெற்ற நீங்கள் அவர்களுக்கு நன்றி செலுத்தி அவர்களின் பாதையை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார் போட்டி நிறைந்த உலகில் மாணவர்களின் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் தொடர்பாற்றல், தலைமை பண்பு போன்ற பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தோல்விகள் என்பது தற்காலிகமானது தான் என்றும் நம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் கடின உழைப்பின் மூலம் வெற்றியை அடைய முடியும் என்றும் அவர் தனது பட்டமளிப்பு விழா பேருரையில் குறிப்பிட்டார். 


விழாவில்  பட்டம் பெற்ற மாணவர்கள் பட்டமளிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த 71வது பட்டமளிப்பு விழாவில் 2017-2020 ஆம் கல்வியாண்டில் பயின்ற 947 இளநிலை மாணவர்களும்,175 முதுநிலை மாணவர்களும் என மொத்தம் 1122 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் 41 மாணவர்கள் அழகப்பா பல்கலைக்கழக அளவில் தரம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


- செய்தியாளர் முத்துராஜன் 

No comments:

Post a Comment

Post Top Ad