மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 2 February 2023

மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டார்.


சிவகங்கை மாவட்டம், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,   காரைக்குடி வட்டம், அரியக்குடியில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்கிட வைத்து, தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.


அதனடிப்படையில், தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்கிட புதிய தொழில் முனைவோர்களை கண்டறிந்து, அவர்களை ஆற்றல் மிக்க தொழில் முனைவோர்களாக உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவி அளித்து புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பனிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10.00 இலட்சம் முதல் 5.00 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான       வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்பபற்ற இளைஞர்களுக்கு வியாபாரம் ஃ சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்கிட முறையே ரூ.5.00 இலட்சம் மற்றும் ரூ.15.00 இலட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையிலான தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவோர்களாக மாற்றி ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறது.


தொழில் உற்பத்தியாளர்கள் தங்களது தொழில்களை நவீனப்படுத்தவும், விரிவுப்படுத்தவும், புதிதாக தொழில் நிறுவனங்களை நிறுவதற்கும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் சிறந்த வழிகாட்டுதலை வழங்கிடவும், அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி பெற்று தருவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


அதில், கலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப் பொருட்களை தயாரிப்பதற்கான கலையினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் விதமாக, ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, காரைக்குடி வட்டம், அரியக்குடியில் 25-க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக வெண்கல குத்துவிளக்கு, கடவுள் உருவங்கள், மணிகள், திருவாட்சி மற்றும் பிற பூஜைப் பொருட்களை உற்பத்தி செய்யும் பணியினை மேற்கொண்டு வரும் உற்பத்தியாளர்கள், அவர்கள் மேற்கொண்டு வரும் தொழிலினை மேம்படுத்தும் விதமாகவும், அரசால் வழங்கப்பட்டு வரும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் குறித்தும் அவர்களுக்கு பயனுள்ள வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


மேலும், மேற்கண்ட 25 நபர்களும் ஒருங்கிணைந்து இப்பகுதியில் வெண்கல உலோக உற்பத்தியாளர்களுக்கான குழுமம் ஒன்றை அமைத்து தருவதற்கு கோரிக்கை வைத்துள்ளதன் அடிப்படையில், அப்பகுதியில் அதற்கான இடத்தையும் தேர்வு செய்வதற்கென நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதனைக் கருத்தில் கொண்டு, இளையதலைமுறையினர்கள் இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி, பயன்பெற்று தங்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என,  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் டி.கண்ணன், சிவகங்கை, புள்ளி விவர ஆய்வாளர் நாகராஜன், சிவகங்கை தொழில் கூட்டுறவு அலுவலர் ருத்ரமூர்த்தி, தொழில் கூட்டுறவு மேற்பார்வையாளர் முத்துக்குமார், காரைக்குடி வட்டாட்சியர் ப.தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad