தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 14 February 2023

தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை இளைஞர்கள் வணிக நோக்க பயண மற்றும் சரக்கு வானங்கள் தொழில் துவங்கிட விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் துவங்க, முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை, மாவட்டத் தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.


இத்திட்டத்தின் மூலம், தொழில் துவங்கிட ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.5.00 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும் தமிழக அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25மூ அல்லது அதிகபட்ச மானியம் ரூ.75.00 இலட்சமாக வழங்கப்படுகிறது. மேலும்,   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 மூ மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3% வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது. 


இத்திட்டத்தின் மூலம், கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். தற்போது குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் மற்றும் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இலக்கீட்டில் 25% நகரும் அலகு விண்ணப்பங்கள் மட்டுமே பரிந்துரைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது, ஆனால், தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முதல் தலைமுறை தொழில் முனைவோர்களிடமிருந்து எண்ணிக்கையில் கட்டுபாடுகளின்றி விண்ணப்பங்கள் பெற தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது, விண்ணப்பங்கள் வணிக நோக்கத்திற்கான  பயண வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஜே.சி.பி, ரோடு ரோலர், கலவை இயந்திரம் டேங்கர் டிரக், கிரேன்கள் மற்றும் போர்க்லிப்ட் கருவிகள், கான்கிரிட் மிக்சர் கருவிகள், ஆழ்துளை கிணறு வாகனங்கள், நடமாடும் உணவக வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய தொழில்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

  

எனவே, தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள், என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பூர்த்தி செய்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிவகங்கை – 630 562 என்ற விலாசத்திற்கு அனுப்புமாறும், மேலும், விபரத்திற்கு சிவகங்கை மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் அவர்களை நேரிலோ அல்லது அலுவலர்களை 89255 33989 மற்றும் 89255 33990 என்ற செல்லிடபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad