சிவகங்கையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 9 January 2023

சிவகங்கையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.


மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 33 பயனாளிகளுக்கு ரூ.58.50 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.

  

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 295 மனுக்கள் பெறப்பட்டது. 


அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில், வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைகான ஆணைகளையும், மாவட்ட சமூகநல அலுவலகத்தின் சார்பில், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பெண் குழந்தைகளுக்கு  தலா ரூ.25,000வீதம் மொத்தம் ரூ.1,00,000 மதிப்பீட்டிலான காசோலைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் சூசையப்பர்பட்டணம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.3,30,000 மதிப்பீட்டிலான பயிர்க்கடனுதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்கத்தின் சார்பில் 11 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ54.20 இலட்சம் மதிப்பீட்டில் அமுதசுரபி நிதி மற்றம் வங்கி பெருங்கடனுதவிகளும் என ஆக மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.58,50,000 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  ப.மதுசூதன் ரெட்டி,  வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.சிவராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர்  மு.காமாட்சி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad