சிவகங்கையில் பொங்கல் பரிசு வழங்கல்: ஆட்சியர் பங்கேற்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 9 January 2023

சிவகங்கையில் பொங்கல் பரிசு வழங்கல்: ஆட்சியர் பங்கேற்பு.


தமிழ்நாடு முதலமைச்சர், தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000ரொக்கம் ஆகியவைகளை வழங்கி தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 418042 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000ரொக்கம் வழங்கும் நிகழவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப.இ  தொடங்கி வைத்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பத்துறையின் சார்பில், தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவைகளை இன்றையதினம்  சென்னை-தீவுத்திடல் பகுதியில் வழங்கி தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 418042 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் நிகழவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி  சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில் தொடங்கி வைத்து தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சர், அறிவிப்பின்படி தமிழர் திருநாள் தைப்பொங்கல் 2023-ஐ தமிழர்கள் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக வேட்டி-சேலை, 1 கிலோ பச்சரிசி 1 கிலோ சர்க்கரை ஒரு முழுநீளக் கரும்புடன் ரூ.1000 ரொக்கத் தொகை வழங்கிட ஆணையிடப்பட்டு, அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் , இன்றையதினம் சென்னையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கி  தொடங்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.


சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 635 முழுநேர நியாயவிலைக் கடைகளும் 171 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் 23 முழுநேர நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 829 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

    

அந்நியாயவிலைக் கடைகள் மூலம் 392971 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும்இ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நியாயவிலைக் கடைகள் மூலம் 25இ071 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் என ஆக மொத்தம் 4இ18இ042 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்படி, சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியிலுள்ள நியாய விலைக்கடைக்குட்பட்ட 1215 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


குடும்ப  அட்டைதாரர்கள் எவ்வித சிரமமுமின்றி பொங்கல்   பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கத்தினை பெறுவதற்கென சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குட்பட்ட நியாயவிலைக்கடைகளின் வாயிலாக குறிப்பிட்டுள்ள தேதிகளில் பொதுமக்களுக்கு வழங்கிடும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் சூழ்நிலையின் காரணமாக வர இயலாதவர்கள் மற்ற தேதிகளிலும் சம்பந்தப்பட்ட நியாயவிலைககடைகளின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். இதனை கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலைத் தவிர்த்து தங்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தினை எவ்வித சிரமமுமின்றி பெற்று பயனடைய வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி  தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின்  இணைப்பதிவாளர்  கோ.ஜீனு  மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் கே.சி.ரவிச்சந்திரன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர்  கு.சுகிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.இரத்தினவேல், துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) ப்பி.குழந்தைவேல், சரக துணைப்பதிவாளர் வே.பாலசந்திரன், கூட்டுறவு சங்கங்களை சார்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் , அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad