ரூ.18.47 இலட்சம் மதிப்பீட்டில் 63முஏயு திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 18 January 2023

ரூ.18.47 இலட்சம் மதிப்பீட்டில் 63முஏயு திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.


திருப்பத்தூர் வட்டம், அதிகரம் மற்றும் பில்லத்தியேந்தல் ஆகிய கிராமங்களில்  ரூ.18.47 இலட்சம் மதிப்பீட்டில் 63முஏயு திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.


கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், அதிகரம் மற்றும் பில்லத்தியேந்தல் ஆகிய கிராமங்களில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம், 63 திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து, தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், எண்ணற்ற திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றிடும் பொருட்டு, பொதுமக்களின் தேவைகளை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், மனித வாழ்வில் முக்கிய அங்கமாகவும், அத்தியாவசியமாகவும் திகழ்ந்து வரும் மின்சாரத்தினை தங்கு தடையின்றியும், சீராகவும் வழங்கிடும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 


குறிப்பாக, நாட்டின் முதுகெழும்பாக திகழ்ந்து வரும் விவசாயிகளின் நலனை காக்கின்ற வகையிலும், விவசாயப் பயன்பாட்டிற்கான புதிய மின் இணைப்புக்களை வழங்கிடும் பொருட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கென 2021-2022-ஆம் நிதியாண்டில் விவசாயிகளுக்கென 1 இலட்சம் புதிய மின் இணைப்புக்களும், நடப்பாண்டில் 50,000 புதிய மின் இணைப்புக்களும் என,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற 1 ½ ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் 1,50,000 மின் இணைப்புக்களை விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்கள். 


அதில், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2021-2022-ஆம் நிதியாண்டில் மொத்தம் 1,243 விவசாயிகளுக்கு மின் இணைப்புக்களும், நடப்பாண்டில் 881 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று விவசாயிகளின் தேவைகளை அறிந்து, அவர்களின் விவசாயப் பயன்பாட்டிற்கு புதிய மின் இணைப்புக்களை வழங்கி, விவசாய பெருங்குடி மக்களின் உற்ற தோழனாக தமிழ்நாடு முதலமைச்சர்  திகழ்ந்து வருகிறார்கள்.  இதுதவிர, சிவகங்கை மாவட்டத்திற்கு வீட்டுப் பயன்பாட்டிற்கென 32 மின்மாற்றிகளும், விவசாயப் பயன்பாட்டிற்கென 100 மின்மாற்றிகளும் நடப்பு நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அதில், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் ஊராட்சிக்குட்பட்ட 600 மின் இணைப்புக்களை கொண்ட அதிகரம் கிராமத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான மின்மாற்றியினை புதிதாக ஏற்படுத்தித்தரும் பொருட்டு, ரூ.8.97 இலட்சம் மதிப்பீட்டில் 63முஏயு திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியினையும் மற்றும் 170 மின் இணைப்புக்களை கொண்ட பில்லித்தியேந்தல் கிராமத்தில் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் 63 திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியினையும் என மொத்தம் ரூ.18.47 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சீரான மின்சாரத்தினை தங்கு தடையின்றி வழங்கிடும் பொருட்டு, மின்மாற்றிகளின் கூடுதல் தேவைகள் இருப்பின், அவைகளையும் புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். 


நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப இன்றைய நவீனகாலத்தில் மின்சாரத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கேற்றவாறு மின் உற்பத்தியினைப் பெருக்கி, தொழில், வர்த்தக ரீதியாகவும், விவசாயப் பயன்பாட்டிற்கும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் அதனை சீராகவும், தங்கு தடையின்றியும் வழங்கிடும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், பொதுமக்கள் தங்களது அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக, நேரில் என்னிடமோ அல்லது தங்களது பகுதிகளுக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவோ தெரிவிப்பத்தன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; என,  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழக செயற்பொறியாளர் செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர் எம்.ஜான் எஃப் கென்னடி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ.பி.என்.ஆர்.ரவி, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  அழகுமீனாள், இளங்கோ, ஊராட்சி மன்றத்தலைவர்கள்  சரோஜா (சிறாவயல்), மீனாள் முருகேசன் (வாணியங்காடு), மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad