கைவினை கலைஞர்களுக்கு, கடன் உதவி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 4 November 2022

கைவினை கலைஞர்களுக்கு, கடன் உதவி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் சார்பில்,  கைவினை கலைஞர்களுக்கு டாம்கோ  மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது -  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஏற்கனவே தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. 


மேலும், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகம் கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடன் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்நிலையில், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் முகவராக செயல்படும் டாம்கோ மூலம் கைவினை கலைஞர்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளின்படி குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுகிறது.


மேற்படி, கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். இதில் திட்டம்-1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98,000க்கு மிகாமலும் மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,20,000க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பெண்களுக்கு 4மூ வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 5மூ வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். திட்டம்-2ன் கீழ், பயன்பெற ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  


இத்திட்டத்தில் பெண்களுக்கு 5மூ வட்டி வீதத்திலும், ஆண்களுக்கு 6மூ வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரர் கோரும் கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் மூலம் 90மூ கடன் தொகையும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின்  மூலம் 5மூ கடன் தொகையும் மற்றும் விண்ணப்பதாரரின் பங்குத்தொகை 5மூ-மும் சேர்த்து கடன் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடன் திரும்ப செலுத்தும் காலஅளவு 5 ஆண்டுகள் ஆகும்.


இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad