
அதனடிப்படையில், இப்பகுதியில் மின்மாற்றி விநியோகம் செய்திட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, அந்தவகையில் ரூ.4.66 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 150 குடும்பங்கள் பயன்பெறும் வகையில், புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இதுபோன்று, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கலுங்குப்பட்டி ஊராட்சி; மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ரூ.9.70 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 110 குடும்பங்கள் பயன்பெறும் வகையில், புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும், பொதுமக்களின் தேவைகளை அறிந்தும், கோரிக்கைகளின் அடிப்படையிலும், கிராமப்புறங்களை மேம்படுத்திட அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக மேற்பார்வை பொறியாளர் ரவி(சிவகங்கை), செயற்பொறியாளர் செல்லத்துரை (திருப்பத்தூர்), ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஹேமலதா (எஸ்.மாத்தூர்), திருச்செல்வம் (ஏரியூர்), சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, உதவி செயற்பொறியாளர் ஜான் கென்னடி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment