சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி ஸ்ரீ மடம் லெட்சுமி நரசிம்மருக்கு சுவாமிக்கு லட்சார்சனை நடைபெற்றது. இந்த மடத்தில் உள்ள லெட்சுமி நரசிம்மருக்கு, மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று, நரசிம்மருக்கு, சிறப்பு திருமஞ்சனம், அதைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
இந்த மடத்தின் உள்ள லெட்சுமி நரசிம்மருக்கு, மடத்தின் சார்பில் லட்சார்சனை தொடங்கி நடைபெற்றது. இதில், காரைக்குடி, தேவகோட்டை, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து லட்சார்சனையில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு, மடம் சார்பில் பிரசாதங்களை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment