ஒரு வயது குழந்தை கையில் பட்டா கத்தியை கொடுத்து பிறந்தநாள் கேக்கை வெட்ட செய்த சித்தப்பாவை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி சத்தியா நகரை சேர்ந்தவர் விஜய் வயது 26. இவர் தனது சகோதரரின் ஒரு வயது குழந்தைக்கு நடந்த பிறந்தநாள் விழாவின் போது குழந்தையின் கையில் பட்டாகத்தி ஒன்றை கொடுத்து அந்த கத்தியால் கேக்கை வெட்டுமாறு செய்ய வைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார்.
இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனதால் இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி போலீசார் வீடியோ காட்சிகள் அடிப்படையில் விஜயை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் மீது ஏற்கனவே 18 வழக்குகள் இருப்பதும் தற்போது அவர் ஜாமீனில் இருப்பதும் தெரிய வந்தது தொடர்ந்து அவர் திரும்பவும் கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment