தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 August 2022

தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு விழா.

தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மானாமதுரை பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது, சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தேப் போட்டியில் மானாமதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவி பிரியதர்ஷினி (12) தங்கப்பதக்கம் வென்றார். 


மேலும் இவர் தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். தெ.
புதுக்கோட்டை குறிச்சி நூலகர் ராஜேஸ்வரியின் மகளான பிரியதர்ஷினிக்கு, அவர் படித்து வரும் மானாமதுரை ஒன்றியம் தெ. புதுக்கோட்டை எம்.கே. என். நடுநிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. 


பள்ளியின் தலைமையாசிரியர் சிவகுருநாதன், கராத்தே பயிற்சியாளர் சிவ. நாகர்ஜூன் மற்றும் ஆசிரியர்கள் மாணவியைப் பாராட்டினர்.

No comments:

Post a Comment

Post Top Ad