விடுதலைப் போராட்ட வீரா் வீரமங்கை வேலுநாச்சியாரின் இசையாா்ந்த வரலாற்று நாடகம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 29 August 2022

விடுதலைப் போராட்ட வீரா் வீரமங்கை வேலுநாச்சியாரின் இசையாா்ந்த வரலாற்று நாடகம்.

சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 30) விடுதலைப் போராட்ட வீரா் வீரமங்கை வேலுநாச்சியாரின் இசையாா்ந்த வரலாற்று நாடகம் நடைபெற உள்ளது.


இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட சிவகங்கை ராணி வீரமங்கை வேலுநாச்சியாரின் பெருமைகளைக் கூறும் வகையிலான இசையாா்ந்த வரலாற்று நாடகத்தை சென்னை கலைவாணா் அரங்கில் கடந்த ஆக. 13 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.


அதைத் தொடா்ந்து, ஈரோடு, மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் இவ்விழா நடைபெற்றது. நிறைவாக, வேலுநாச்சியாா் வாழ்ந்த சிவகங்கையில் மேற்கண்ட வரலாற்று நாடகம் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது. அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ள நாடகம் தொடக்க நிகழ்வுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகிக்கிறாா்.


தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடக்கி வைக்க உள்ளாா். இதில், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொள்ள உள்ளனா். 

No comments:

Post a Comment

Post Top Ad