சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த சிலம்ப மாஸ்டர் பெருமாள் வீர விதை சிலம்பாட்ட கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும், மாணவிகளுக்கும் சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இவரிடம் சிலம்பம் கற்கும் மாணவர்கள் மாவட்டம் முதல் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர். இவரது சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த விருதான கலை வளர்மணி விருதை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
இவரது மாணவர்களான முனீஸ் மற்றும் சுபீனாவிற்கு கலை இளமணி விருது வழங்கினர்.
No comments:
Post a Comment