அதனை தொடர்ந்து நம் நாட்டிற்காக இன்னுயிர் நீர்த்த தியாகிகளையும், வீரர்களையும் மரியாதை செய்யும் நிகழ்வாக 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 கொடி மரங்களில் மாணவர்களின் பெற்றோரும், ஆசிரியர்களும், சிறப்பு விருந்தினர்களும் 75 தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தனர்.
இந்த விழாவிற்கு திருச்சி மண்டல மான்போர்ட் சபை தலைவர் முனைவர் இருதயம் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முகமது சலாஜுதீன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த விளையாட்டு விழாவினை பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் விக்னேஷியஸ் தாஸ் தலைமையில் விளையாட்டு விழா நடைபெற்றது.
இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment