சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்துக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ. 17.50 லட்சம் செலவில் ஆடுகள் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., தமிழரசி பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார்.
நகராட்சி கமிஷனர் கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், மண்டல இணை இயக்குனர் டாக்டர். நாகநாதன், உதவி இயக்குனர் சரவணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம். எல். ஏ., மதியரசன், நகரச் செயலாளர் நஜ்முதீன், ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமா, துணைத் தலைவர் சவுரியத் பீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment