சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே திருமாஞ்சோலை கிராமம் உள்ளது இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதனடிப்படையில் பூவந்தி காவல் சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன்சோதனை மேற்கொண்டார்.
அப்பொழுது உடையநாதபுரத்தை சேர்ந்த தவமணி (வயது35) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது அவரிடம் இருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment