தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகள் இரு மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படும், தங்க பொருட்கள் மட்டும் பாதுகாப்பு பெட்டகத்தில் சேமித்து வைக்கப்பட்டன. 2015ல் தங்க தேர் செய்யப்பட்ட பின் மீதமான தங்கத்துடன் இதுவரை 14கிலோ 70கிராம் தங்க நகைகள் இருப்பில் இருந்தன.
அவற்றை ஓய்வு பெற்ற நீதிபதி மாலா தலைமையில் சிவகங்கை அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிகுமார், துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) சிவராஜ்குமார், மடப்புரம் செயல் அலுவலர் வில்வமூர்த்தி, கணக்காளர் புஷ்பராஜ், அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன், உறுப்பினர்கள் பாஸ்கரன், சண்முகவேல் ஆகியோர் முன்னிலையில் அவற்றை உருக்கும் பணி தொடங்கியுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் பணிக்கு பின் உருக்கப்பட்ட தங்கநகைகள் கட்டிகளாக மாற்றப்பட்டு மும்பையில் உள்ள ஸ்டேட் வங்கி கருவூலகத்திற்கு அனுப்ப பட உள்ளது. காணிக்கை தங்க நகைகள் உருக்கப்படுவதை ஒட்டி கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment