தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கம் - என் குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு ஊர்வலம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 3 June 2022

தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கம் - என் குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு ஊர்வலம்.

தமிழ்நாடு அரசு அறிவித்த தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் சிவகங்கை நகராட்சி சார்பில்  சிவகங்கை நகரில் நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் அவர்கள் நகராட்சி பொறியாளர்  பாண்டீஸ்வரி அவர்கள் முன்னிலையில் என் குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு ஊர்வலம்  நகர் முழுவதும் நடைபெற்றது இதில் மீண்டும் மஞ்சள் பை வேண்டும். 


நகராட்சி பகுதியை தூய்மையாக வைத்து கொள்வோம் என்ற பதாகையை ஏந்தி நகர் முழுவதும் விழிப்புணர்வு ஊர்லவம் நடைபெற்றது இதில் நகர்மன்ற துணை தலைவர்கார் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள்,நகராட்சி அலுவலர்கள்,நகராட்சி பணியாளர்கள் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், நகர பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

No comments:

Post a Comment

Post Top Ad