சிவகங்கை நகர திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை நகர் மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான சிஎம் துரை ஆனந்த் அவர்கள் தலைமையில் சிவகங்கை திமுக மாவட்டத் துணைச் செயலாளர் மணிமுத்து அவர்களின் முன்னிலையில் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் இன்று பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தனர்.
இந்நிகழ்வில் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment