ரூ.21 லட்சம் மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்சை நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 12 May 2022

ரூ.21 லட்சம் மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்சை நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட மக்களின் வசதிக்காக ரூ.21 லட்சம் மதிப்பிலான அதிநவீன ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடித்துள்ள 'டான்' திரைப்படத்தின் டிரைலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள 'டான்' படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளது.


இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படம் நாளை வெளியாகவுள்ளதால், படத்துக்கான விளம்பரப் பணிகளில் படக் குழு தீவிரம் காட்டி வருகிறது.


இந்நிலையில் தனது தந்தையின் பெயரில் நடத்தி வரும் 'தாஸ் அறக்கட்டளை' மூலம் குறிப்பிடத்தகுந்த சமூக சேவை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் சிவகார்த்திகேன்.


அந்த வகையில், சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக ரூ.21 லட்சம் மதிப்புள்ள நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்சை நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார்.நேற்று இந்த ஆம்புலன்ஸ் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


இதற்கான விழா மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடந்தது.சிவகார்த்திகேயன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad