சிவகங்கை நகராட்சி ஆணையாளர், இயக்குநரை எதிர்த்து பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை நகராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆணையாளராக பொறுப்பேற்றவர் பாலசுப்ரமணியன்.
இந்த நிலையில், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குநர் பொன்னையா தலைமையில் தமிழகம் முழுவதுமுள்ள நகராட்சி ஆணையாளர்களுடனான காணொளி கூட்டம் நடைபெற்றது.
அப்போது இயக்குநர் பொன்னையா தகாத வார்த்தையில் திட்டியதாகவும், அதற்கு ஆணையாளர் எதிர்ப்பு தெரிவித்து பேசியதாகவும், அதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment