மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 314 வது குருபூஜை விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்களின் தலைமையில் அன்னாரது திருவுவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ஏ. ஆர். பி. முருகேசன், இளையான்குடி பேரூராட்சி மன்றத் தலைவர் நஜுமுதின், இளையான்குடி பேரூராட்சி மன்றத் துணை தலைவர் இப்ராஹிம், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தில்லை புவியரசு, மாவட்ட பிரதிநிதி கருணாகரன், ராஜகம்பிரம் கூட்றவு சங்க தலைவர் தனசேகரன், 2-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இந்துமதி திருமுருகன், 17-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் பாலாஜி, 1-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் தேன்மொழி விஜயகுமார், தகவல் தொழில்நுட்பம் அணி கண்ணன், திமுக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment