மானாமதுரையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 June 2024

மானாமதுரையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


 மானாமதுரையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.



சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாண்புமிகு முன்னால் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோருக்கு இனிப்புகள் வழங்கினர். 



அதனைத் தொடர்ந்து மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு முடிவு விழா மானாமதுரை நகர் கழக செயலாளர் திரு க. பொன்னுசாமி அவர்களின் முன்னிலையிலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மானாமதுரை நகர்மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி மற்றும் நகர் மன்றத் துணைத் தலைவர் திரு பாலசுந்தர் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் ஊராட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், மானாமதுரை ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் துணை பெருந்தலைவர், நகர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.



மேலும் சென்னையில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியவை முன்னிலையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad