இதனைத் தொடர்ந்து, கிராமத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை குறையும், சான்றிதழ்களும், கேடயமும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். பின்னர் புத்தடி கருப்பு சாமி கோயில் முன்புறம் காப்புக் கட்டி நேர்த்திக்கடன் இருந்த சாமியடிகளும், பக்தர்களும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் சாமியாடி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறியும், ஆசி வழங்கியும், திருநீறு பூசினார்.
இந்த மாசிக் களரி விழாவில், நாலுகோட்டை, சோழபுரம், சிவகங்கை, ஒக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிகனை கோயில் பொறுப்பு பூசாரி சக்தி மற்றும் ஸ்ரீ பத்தடி கருப்பு சேவா அறக்கட்டளை நிர்வாக கமிட்டியினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment