மகளிர் சுய உதவி குழு கடன் இணைப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஈரோட்டில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிவகங்கையில் மாண்புமிகு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் மகளிர் சுய உதவி குழு கடன் இணைப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் சேங்கைமாறன், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment