அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அணி முதல் இடத்தைப்பெற்றனர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 January 2024

அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான இறகுப்பந்து போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அணி முதல் இடத்தைப்பெற்றனர்.


அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான  இறகுப்பந்து போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அணி முதல் இடத்தைப்பெற்றனர். அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பாக அழகப்பா அரசு கலைக் கல்லூரி ஏற்று நடத்திய இப் போட்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்ற கல்லூரிகள் கலந்து கொண்டன. மாணவர்களுக்கு நடைபெற்ற போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதலிடத்தைப் பெற்றது. 

மேலும் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதுகலை முதலாம் ஆண்டு பொருளியல் மாணவர் சரண், இரண்டாம் ஆண்டு இளங்கலை வணிகவியல் மாணவர்கள் அகமது யாசின் மற்றும் மாதேஸ்வரன் ஆகியோர் வேலூர் விஐடியில் நடைபெற்ற தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பாக கலந்து கொண்டு விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.  


வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி, உடற்கல்வி இயக்குனர் முனைவர் அசோக்குமார்,  மற்றும் பேராசிரியர்களும் ஆசிரியர்களல்லாப் பணியாளர்களும் பாராட்டி வாழ்த்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad