இந்நிகழ்ச்சியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி வரவேற்புரை ஆற்றினார். 1981-1984 ஆம் கல்வியாண்டில் இயற்பியல் பயின்ற 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் தாங்கள் பயின்ற இயற்பியல் துறையில் தற்போது பயிலும் மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் யுபிஎஸ் மின்சாதன இயந்திரம் ஆகியவற்றைத் தருவதாக முதல்வரிடம் உறுதியளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் இயற்பியல் துறையில் பயின்று தற்போது பல்வேறு துறைகளிலும், நிறுவனங்களிலும் பணியாற்றி வரும் சந்தானம், திருமலை, நாராயணன், சிவப்பிரகாஷ், சுப்பிரமணி, மூர்த்தி, விஸ்வநாதன், லட்சுமணன், சேவுகன் ஆகியோர் பங்கேற்று தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நெகிழ்ச்சியான இந்த சந்திப்பில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் கவிதா, முனைவர் தெய்வமணி மற்றும் பேராசிரியர்களும், ஆசிரியரல்லாப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment