வருகின்ற ஜனவரி-2024, 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தை தினத்தன்று மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டுப் பத்திரமும், ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது.
தேசிய பெண் குழந்தை தின விருதிற்கு சிவகங்கை மாவட்டத்தில், தகுதியினை உடைய 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் குழந்தைகள், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகின்ற 20.11.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பித்தல் வேண்டும்.
13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை, பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியம் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்றவைகளுக்கான வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.
மேலும், இவை தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
No comments:
Post a Comment