பூண்டி எ.வி.வி.எம் புஷ்பம் கல்லூரியின் இயற்பியல் துறையும், தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறையும் இணைந்து நானோ பொருட்களின் சமீபத்திய பயன்பாடுகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் காரைக்குடி அழகப்பா அரசுக் கல்லூரியின் இயற்பியல் துறை இணைப் பேராசிரியரும், அழகப்பா பல்கலைக்கழக செனெட் உறுப்பினருமான மா.கருணாகரன் அவர்களுக்கு சிறந்த ஆராய்ச்சியாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த ஆய்வு மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளைச் சமர்பித்தனர். இதில் அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை சார்ந்த ஆய்வாளர்கள் பிரபாகரன் சுவரொட்டி விளக்கப் பிரிவிலும், உஷா வாய்மொழி விளக்க போட்டியிலும், இரண்டாம் பரிசு பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். பரிசு பெற்றவர்வர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது.
சிறந்த ஆய்வாளர் விருது பெற்ற இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் கருணாகரன் மற்றும் சிறந்த கட்டுரைகள் எழுதி பரிசு பெற்ற ஆய்வாளர்கள் பிரபாகரன் மற்றும் உஷா ஆகியோரை கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி பாராட்டி வாழ்த்தினார். இயற்பியல் துறை தலைவர் கவிதா உடனிருந்தார்.
No comments:
Post a Comment