மானாமதுரை சமத்துவபுரம் சமுதாயக்கூடத்தில் கற்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 October 2023

மானாமதுரை சமத்துவபுரம் சமுதாயக்கூடத்தில் கற்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் செய்களத்தூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் 'சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்' கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு  சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான ஆ. தமிழரசிரவிக்குமார் நிகழ்ச்சியை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 

அதனை தொடர்ந்து கற்பிணிகளுக்கு தாம்பூலம் வழங்கி, பின் அனைவருக்கும் உணவுகளை பரிமாறினார். இந்நிகழ்ச்சியில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட கற்பிணி தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் த. சேங்கைமாறன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜாமணி, ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி லதா அண்ணாதுரை, ஒன்றிய குழு துணை தலைவர் திரு முத்துச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மலைச்சாமி, திருமதி ராதா சிவச்சந்திரன, திருப்புவனம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா கான், திருப்புவனம் ஒன்றிய கவுன்சிலர்கள் லாடனேந்தல் சுப்பையா, மடப்புரம் மகேந்திரன், சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad