சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் வைகை ஆறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலைகளின் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் வண்ணம் குப்பைகள் அதிகரித்து வரும் நிலையில் திருப்புவனம் நீர்நிலை பாதுகாப்பு குழு சார்பாக 'தூய்மை பணி திட்டத்தை' சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்களின் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இதில் திட்டத்தை துவக்கி வைத்த கையோடு விறுவிறுவென நேரடியாக களத்தில் குதித்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை தாமாக முன்வந்து அப்புறப்படுத்தி அதிரடியாக செயல்பட்டார். மேலும் இத்திட்டத்தின் கீழ் கானல் நீர், ஆடை துணிகள் மற்றும் நெகிழிகள் போன்ற குப்பைகளை இயந்திரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தன்னார்வலர்களைக் கொண்டும் குப்பைகளை அகற்றும் தூய்மை திட்டப் பணியானது மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் நீர்நிலை பாதுகாப்பு குழுவை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த ஏனைய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment