திருப்புவனத்தில் கூட்டுறவு வங்கி ஏடிஎம் மையத்தை திறந்து வைத்த அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 July 2023

திருப்புவனத்தில் கூட்டுறவு வங்கி ஏடிஎம் மையத்தை திறந்து வைத்த அமைச்சர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி  திருப்புவனம் ஒன்றியத்தில் கூட்டுறவு வங்கியின் ஏடிஎம் மையத்தினை சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களும் மற்றும் மாண்புமிகு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.  தமிழரசி ரவிக்குமார் அவர்களும் இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். 


திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மக்களின் அன்றாட பணப்பரிமாற்ற தேவை பூர்த்தி செய்யும் வகையில் கூட்டுறவு வங்கி கிளை தங்களின் ஏடிஎம் மையத்தை நிறுவுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானாமதுரை தொகுதியில் உள்ள திருப்புவனத்தில் மக்கள் தொகை அதிகமாகும் சூழலில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை துரிதப்படுத்தவும், திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவும் தன் தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் மக்களை கருத்தில் கொண்டு வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நிகழ்வில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளும், பேரூராட்சி தலைவர் திரு சேங்கைமாறன் அவர்களும், நகரக் கழகச் செயலாளர் திரு நாகூர்கனி அவர்களும், ஒன்றிய கழக செயலாளர் திரு கடம்பசாமி அவர்களும், கழக முன்னோடிகள் மற்றும் உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.


- செய்தியாளர் ஜே. கே. லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad