அரியாண்டிபுரத்தில் புதிய நியாய விலை கடை மற்றும் கலையரங்கம், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 July 2023

அரியாண்டிபுரத்தில் புதிய நியாய விலை கடை மற்றும் கலையரங்கம், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி இளையான்குடி தெற்கு ஒன்றியம் அரியாண்டிபுரம் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்க கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினருமான திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். 

பின்னர் அதே பகுதியில் MGNREGS திட்டத்தின் கீழ் புதிய நியாய விலை கடை கட்டிடத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். 


இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணி,  முத்துகுமரன், வருவாய் ஆய்வாளர் பிரபு, அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், திமுகவின் வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சு.பா. மதியரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராக்கு குமரேசன், கண்ணமங்கலம், கூட்டுறவு சங்கத் தலைவர் சு.பா. தமிழரசன், தெற்கு ஒன்றிய கவுன்சிலர்கள் திருமதி மலையரசி ரவிச்சந்திரன், திருமதி செல்வி சாத்தையா, வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சிவநேசன், கோட்டையூர் காளிமுத்து, பாஸ்கரன், மேற்கு கிளை செயலாளர் திரு ஜெகநாதன், பிரதிநிதி கஸ்பார், மாவட்ட பிரிதிநிதி ரவிச்சந்திரன், சேவியர் மாணவரணி தானசேகரன், இளைஞரணி பைரோஸ்கான், ஆரிஃப்,  ராவுப், ஜெயின், காதர் சுல்தான், இல்ராம்ஷா, ஆஜம், கனி, ரிஷி, சாயின்சா, சௌந்தர், தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன், வட்டாட்சியர் கோபி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


- செய்தியாளர் லிவிங்ஸ்டன்

No comments:

Post a Comment

Post Top Ad