தாலுகா அலுவலகம் முன்பாக கிராம பொதுமக்கள் கூட்டமாக மனு கொடுக்க வந்தனர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 15 May 2023

தாலுகா அலுவலகம் முன்பாக கிராம பொதுமக்கள் கூட்டமாக மனு கொடுக்க வந்தனர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பாக கிராம பொதுமக்கள் கூட்டமாக மனு கொடுக்க வந்தனர். மேலும் இது பற்றி பொதுமக்கள் சார்பாக அங்கு வந்த பாக்கியம் என்ற விவசாயிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், மானாமதுரை தாலுகா கேகே பள்ளம் குரூப்ஸ் சன்னதி புதுக்குளம் பஞ்சாயத்து தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ளது ஒடப்பங்குளம் கண்மாய். 

இந்த கண்மாய் விளாக்குளம் மற்றும் செய்யாளூர் கிராமத்திற்கு பாத்தியமானது, மேலும் இந்த கண்மாயின் மூலமாகத்தான் சுமார் நூறு ஏக்கருக்கும் மேலாக மற்றும் பத்திற்கும் மேற்பட்ட கிராமத்தினர் விவசாயத்திற்கு பாசன வசதி பெற்று வருகின்றனர். சமீப காலமாக இங்கு பட்டா வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்தது, மேலும் பட்டா வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் விவசாயத்திற்கு கிடைக்கும் பாசன நீர் கிடைக்காமல் தடை பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் சுற்று வட்டாரப் பகுதி கிராம பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக அரசுசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க மனு கொடுக்க வந்துள்ளோம் என்று கூறியதோடு, இதுபோல் மேலும் தொடர்ந்தால் தங்களின் வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்பட்டு விடும் என்று அனைத்து கிராம மக்களும் அஞ்சுகின்றனர் என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad