சிவகங்கை நகராட்சிட்குட்பட்ட பகுதிகளில் ரூ.08.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 14 May 2023

சிவகங்கை நகராட்சிட்குட்பட்ட பகுதிகளில் ரூ.08.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிட்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு, உத்தரவிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சித்திட்டப் பணிகள் சம்பந்தப்பட்ட துறைகள் வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


அவ்வாறாக, மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் நிலை குறித்து, உரிய களஆய்வுகள் மேற்கொண்டு, அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இன்றையதினம் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-2023-ன் கீழ் ரூ.01.60 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் செட்டியூரணி புனரமைத்தல் பணிகள் குறித்தும், ரூ.03.89 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை அமைத்தலுக்கான பணிகள் குறித்தும் மற்றும் ரூ.01.95 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் புனரமைக்கும் பணிகள் குறித்தும், ரூ.35.00 மதிப்பீட்டில் குண்டூரணி புனரமைக்கும் பணிகள் குறித்தும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் ரூ.27.00 இலட்சம் மதிப்பீட்டில் மஜீத் ரோட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சமையல் அறைக் கட்டிடம் கட்டுமானப் பணிகள் குறித்தும், தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.43.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொருட்கள் மீட்பு மையக்கட்டிடம் கட்டுமானப் பணிகள் குறித்தும் என பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.08.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மேற்கண்ட பணிகளை விரைந்து தரமான முறையில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட வார்டு-11-ல் உள்ள சாத்தப்பர் ஊரணியில் தூய்மை நகருக்கான மரம் நடுதல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளின் போது,  சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரைஆனந்த், நகராட்சி ஆணையாளர்(பொ) பாண்டீஸ்வரி, நகர்மன்றத் துணைத் தலைவர் மா.கார்கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் என்.எம்.ராஜா, சு.ஜெயகாந்தன், சி.எல்.சரவணன், காந்தி, தி.விஜயகுமார்,  வீ.சேதுநாச்சியார் வீரக்காளை,  ரா.ராஜேஸ்வரி ராமதாஸ், பிரியங்கா சண்முகராஜன்,  சுபைதாள்பேகம் சீமான் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad