மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 49 பயனாளிகளுக்கு ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளைமாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 10 April 2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 49 பயனாளிகளுக்கு ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளைமாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 331 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில், வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும், திருப்புவனம் வட்டத்தைச் சார்ந்த முரளி என்பவர் தீ விபத்தினால் இறந்ததையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1,00,000 காரைக்குடி வட்டத்தைச் சார்ந்த மணிகண்டன் என்பவர் நீரில் மூழ்கி இறந்ததையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1,00,000 மற்றும் செபாஸ்டின் என்பவர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி.) அலுவலகத்தில் ஈப்பு ஓட்டுநராகப் பணிபுரிந்த போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததையொட்டி, அவரது வாரிசுதாரகிய மனைவிக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.5,00,000 தேவகோட்டை வட்டத்தைச் சார்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் நீரில் மூழ்கி இறந்ததையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1,00,000 என, மொத்தம் ரூ.8,00,000க்கான காசோலையினையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சாக்கோட்டை ஊராட்சியைச் சார்ந்த 10 மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி (ஊஐகு)  மொத்தம் ரூ.6,00,00-க்கான காசோலையினையும், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் சார்பில் 2022-2023-ஆம் ஆண்டிற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தின் கீழ் சிவகங்கை வட்டத்தைச் சார்ந்த 12 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும், பில்லூர் தொடக்க வேளாண்மை கூட்;டுறவுத்துறை கடன் சங்கம் சார்பில் 02 மகளிர் சுயஉதவிக்குழுவைச் சார்ந்த 15 உறுப்பினர்களுக்கு மாடு வளர்ப்பிற்கு மொத்தம் ரூ.27,00,000 மதிப்பீட்டில் கடனுதவிக்கான காசோலைகளையும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திட்ட செயலாக்க கோட்டம் - ஐ மூலம், பையூர் பிள்ளைவயல் கிராமத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மலிவு விலையில் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில், 05 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.9,08,000 மதிப்பீட்டில் வீட்டிற்கான ஒதுக்கீடு ஆணைகளையும் என, மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.50,00,008 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ச.ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ)  பி.சாந்தி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad