அங்கிருந்து இன்னோவா காரில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக காரில் பின்புறம் சீட்டில் ஏற்றி கடத்திக்கொண்டு சென்றுனார். திருச்சி சாலையில் மவுண்ட் சியோன் பொறியியல் கல்லூரி குறுக்கு சாலையயைக் கடந்து சென்ற போது இரவிச்சந்திரனை கீழே தள்ளிவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் குற்றவாளிகளை கைது செய்ய தென்மண்டல காவல் துறை தலைவர் அவர்களது ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் அவர்களது உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அவர்களது மேற்பார்வையில், காரைக்குடி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் IPS அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.நமச்சிவாயம் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு கொண்டனர்.
ஒவ்வொரு தனிப்படையும் வெவ்வேறு விதமான பணிகள் மேற்கொண்டு குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய இன்னோவா காரின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்மூலம் குற்றவாளிகளான சென்னையைச் சேர்ந்த சூரியா என்ற நாகேந்திரன், பால்ராஜ், விஜயகுமார், சாமுவேல், சதீஸ் மற்றும் பெருமாள் ஆகியோரை கைது செய்தனார். அவர்கள் கொள்ளையடித்து சென்ற பணம் மற்றும் நகைகளை மீட்டனர்.
இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் தனிப்பபடையினரின் சிறப்பான செயலை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment