சிவகங்கையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 2 January 2023

சிவகங்கையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.


மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.35.37 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.


மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 259 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில், வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 42 பயனாளிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.42,000 மதிப்பீட்டிலான பல்வேறு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நலவாரியங்களின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா 20,000 வீதம் மொத்தம் ரூ.1,00,000 மதிப்பீட்டிலான திருமணம் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 1 பயனாளிக்கு ரூ.5,00,000 மதிப்பீட்டிலான விபத்து மரணத்தொகைக்கான ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு தலா 55,000வீதம் மொத்தம் ரூ.2,75,000 மதிப்பீட்டிலான இயற்கை மரணத்திற்கான ஆணைகளையும், தாட்கோ அலுவலகத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.16,77,298 மதிப்பீட்டிற்கான வாகனம் மானியத்தொகைக்கான ஆணைகளையும், 1 பயனாளிக்கு ரூ.8,39,200 மதிப்பீட்டிற்கான வாகனம் மானியத்தொகைக்கான ஆணையினையும் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் கீழ் உறுப்பினர்களின் 2 வாரிசுதாரர்களுக்கு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கு தலா ரூ.1,500வீதம் ரூ.3,000 மதிப்பீட்டிலான கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளையும், இளையான்குடி வட்டத்தைச் சார்ந்த சுப்பிரமணியன், மின்சாரம் தாக்கி இறந்தமைக்கு, அவரது வாரிசுதாரராகிய மனைவிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000 மதிப்பீட்டிலான நிவாரண உதவித்தொகைக்கான காசோலையினையும் என ஆக மொத்தம் 59 பயனாளிகளுக்கு ரூ.35,36,498 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும்; மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,  வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர்  மு.காமாட்சி, தொழிலாளர் நல ஆணையர் கோட்டீஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் து.கதிர்வேலு உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad