சரித்திர, முக்கியமான செய்திகள், ஏடுகள், ஆவணங்கள் ஆகியவற்றினை தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 1 November 2022

சரித்திர, முக்கியமான செய்திகள், ஏடுகள், ஆவணங்கள் ஆகியவற்றினை தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.

அரசாணை எண்.1062, கல்வித்துறை நாள் 25.07.1990ன்படி, சரித்திர, முக்கியமான செய்திகள், ஏடுகள், ஆவணங்கள் ஆகியவற்றினை தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.  


இம்மாதிரியான தொன்மையான ஆவணங்கள் நமது கலாச்சாரத்தை மிகவும் பிரதிபலிப்பதாக இருக்கும். இவற்றினை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ், ஆவணக் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் துறையின் பாதுகாப்பில் வைக்க வேண்டியது அவசியமாகின்றது. மேலும், காலமாற்றத்தினாலும், மனிதனின் அஜாக்கிரதையாலும் இதன் முக்கியத்துவம் கெடாமல், குறையாமல் மின்னனு முறையில் பாதுகாப்பதும் முக்கியமானதாகும்.


இது தொடர்பாக பொதுமக்கள் ஃ நிறுவனங்களில் வரலாற்று சிறப்பு மிகுந்த ஆவணங்கள் ஏதேனும் தங்கள் வசம்; இருந்தால், சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து மேற்கண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை பாதுகாக்கவும், ஆராய்ச்சிக்கு பயன்படுத்த உதவிடுமாறும், மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவரிக்கும், 94450 08149 என்ற கைப்பேசி எண்ணிற்கும், 04575 - 240392 என்ற அலுவலக எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad