சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டி கிராமத்தில் ஜான் பெஸ்டர்ட் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் இவர் சிவகங்கையில் இருந்து காரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருக்கோஷ்டியூர் தெப்பக்குளம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment