சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில், மருதுபாண்டியர்களின் 221-வது நினைவு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆகிய அமைச்சர் பெருமக்கள்; மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, மருதுபாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர்.டி.செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத்தூணிற்கு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்; உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சி.பிரபாகரன், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவி கோகிலாராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) மு.ராஜசெல்வன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, திருப்பத்தூர் வட்டாட்சியா வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment