கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மேற்படி தொகையில் 20மூ கூடுதலாகவும் தனியார் மற்றும் கண்மாய் குத்தகைதாரர்களுக்கு மேற்படி தொகையில் 50மூ கூடுதலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆகையால், மீன்வளர்ப்போர் மற்றும் மீனவர்கள் சிவகங்கை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக தங்களது பண்ணைக் குட்டைகளை பதிவு மேற்கொண்டு பயன்பெறலாம்.
மேலும், மீன்விரலிகளை வாங்கி பயன்பெற விரும்பும் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணை, கீழப்பூங்குடி ரோடு, ஒக்கூர், சிவகங்கை – 630561 என்ற முகவரிக்கோ அல்லது 04575 – 240848 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment