இவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்தனர். மானாமதுரையில் சிவகங்கை சாலையில் அரசு நிதி உதவி பெறும் சி.எஸ்.ஐ செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான காது கேளாத, வாய் பேச முடியாத மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இங்குள்ள ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இது குறித்து வெளியில் கூறினால் தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மாணவிகளை மிரட்டுவதாகவும் சிவகங்கை மாவட்ட காது கேளாதோர் நலச் சங்கத்தினர் புகார் தெரிவித்து வந்தனர்.
மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் மனுக் கொடுத்தனர், ஆனால் புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காது கேளாதோர் நலச் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment